Wednesday, September 24, 2014

கடையநல்லூர் அருகே ரெயில்வே பிளாட்பாரத்தில் மயங்கி விழுந்த பெண் சாவு

நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் ஆனந்த், கூலித்தொழிலாளி. இவரது மனைவி மல்லிகா (வயது 35). இவருக்கு உடல்நிலை சரியில்லாததால் மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

நோய் குணமானதால் மல்லிகா தனது கணவருடன் பாவூர்சத்திரம் செல்வதற்காக மதுரை– செங்கோட்டை பாசஞ்சர் ரெயிலில் வந்தார். பாம்புகோவில் சந்தை ரெயில் நிலையத்தில் கணவன்– மனைவி இருவரும் இறங்கி பிளாட்பாரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென மல்லிகா மயங்கி விழுந்தார். இதையடுத்து மல்லிகாவை அருகே உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே மல்லிகா இறந்துவிட்டதாக கூறினர்.

இச்சம்பவம் குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments:

Post a Comment